யாரும் அறியாத நாம் - அறிவுநிதி

Photo by FLY:D on Unsplash

உன்னை வரையும் பாக்கியம்!
என்விரல்களில் காத்திருக்கின்றன.!
என் உடலெங்கும்!
நீயான ஓவியம்!
ஓட்டப்பட்டள்ளது!!
மௌனம்!
உன் மொழியான போதும்!
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.!
எனதான சொற்களை!
உன்னில் நிரப்புகிறேன்.!
நீ வெளிப்படுத்தாத புன்னகை – சில!
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு!
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.!
நீ வினோதங்கள் ஆகிறாய்,!
நான் புன்னகையாகிறேன்!
கண்முன் - ஒரு!
பயணத்தை ஒப்படைக்கிறாய்.!
அதைமேற்கொள்ள!
பூக்களையும் பரிசளிக்கிறாய்!
உன்னை தாங்கிக்கொள்ள!
கரம் ஏந்துகிறேன்!
நீ நழுவி!
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்!
யாரும் அறியாத ரகசியமாய்!!
கவி ஆக்கம்: அறிவுநிதி
அறிவுநிதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.