மழைக்காலம் - அன்பாதவன்

Photo by FLY:D on Unsplash

1 !
வருஷந்தோறும் பொழிகிறது மழை !
இடிந்துவிழுகிற கட்டடங்கள் !
சிதைந்த உடல்கள் பார்த்து !
'உச்' கொட்டி பெருமூச்சுவிட்டு !
கடவுளை சபித்து நகர்கிறது வேகமாய் !
மாநகர வாழ்வு !
2 !
மழை பொழிந்து கொண்டிருக்கிறது !
ரயில் கண்ணாடியில் படிந்த !
நீர்ப் படிமத்தில் எழுதுகிறேன் உன் பெயரை !
அனிச்சையாய் !
சார் நம்ம ஊரா எனத் தொடங்கி !
தாய்மொழியில் விசாரிப்புகள் !
கிடைத்ததொரு புதிய நட்பு உன்னால் !
3 !
ரயிலை நிறுத்தி பார்க்க வைத்து !
மழையில் மூழ்கி குளிக்கின்றன !
தண்டவாளங்கள் !
4 !
மழை இரைச்சலை மீறி !
புழுங்கி கசகசக்கும் அடைத்த ரயில் பெட்டியில் !
இதமாய் ஒலிக்கின்றன !
உடைந்த பாடல் வரிகள் !
5 !
மழை யைப் பற்றி எழுத !
பொழிய வேண்டும் !
புதுமழை
அன்பாதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.