அஜந்தனின் 7 கவிதைகள் - அஜந்தன் மயில்வாகனம்

Photo by Jr Korpa on Unsplash

வரம்! !
குழந்தை வரம் !
கொடு ங்கள் சாமி !
என்றாள் அவள் !
சரியான இடத்துக்குத் தான் !
வந்திருக்கிறாய் !
என்றார் சாமியார் !
இந்து மதம் !
மிருகங்களைத் தெய்வமாக்கி !
மனிதார்களை மிருகமக்கி !
இறந்தவருக்கு கோயில்கட்டி !
இருப்பவர்களைப் போட்டு த்தள்ளி !
மாட்டு மலத்தை !
திருநீறாக்கி !
மனித மண்டையில் !
நாமம் போட்டது. !
எமது பண்பாடு !
பாம்பிற்கு பாலுற்றி !
கும்பிடு வோம் !
பச்சைப்பெண்ணிற்கு கள்ளிப் !
பாலூற்றி !
கொன்றிடு வோம்! !
சோழியன் குடு மி !
பணக் கஸ்ரம் தீர !
என்ன வழி என்றான் !
ஆசாமி! !
ஒரு பத்து ரூபாய் கட்டி !
பூசை செய் என்றான் !
பூசாரி! !
அவசியமா? !
குடிசைத் தாயின் முலையில் பாலில்லை !
அழிகின்றது மழலை! !
கோபுரக் கோயிலில் பாலாபிஷேகம். !
தலைவர்கள் !
தமிழன் நடிகர்களையெல்லாம் !
தலைவர்களாக்கினான் !
அதனால் !
தலைவர்கள் எல்லாம் !
நடிகர்கள் ஆனார்கள் !
!
சமூகம் !
நேற்று வரை !
நானும் அவனைத் !
தேசத் துரோகியென்றே !
எண்ணியிருந்தேன் !
ஆனால் !
அவன் தான் உண்மையான !
தேச பக்தன் !
என்று நான் !
உணர்ந்த போது !
இன்று அவன் !
உயிருடன் இல்லை! !
உண்மைகள் வதந்திகளாகவும் !
வதந்திகள் உண்மைகளாகவும் !
உலாவரும் !
எமது சமூகத்தில் !
சாக்கடையில் !
அனாதரவாக !
மிதக்கின்றது !
அவனின் பிணம்
அஜந்தன் மயில்வாகனம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.