வரிசையில் நிற்கிறார்கள்.. செஞ்சோலை - வித்யாசாகர்

Photo by Sajad Nori on Unsplash

வரிசையில் நிற்கிறார்கள் வாழ்வை தொலைக்கிறார்கள்!.. செஞ்சோலை மறக்கும் வரை ஓயாதீர் உறவுகளே!!!
!
01.!
வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!!
--------------------------------------------------------------------------------!
'விடையிராதா!
நீண்ட கேள்விகளால்!
நிறைகிறது -!
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..!
'நீண்ட பாலை நிலங்களில்!
காய்ந்த புற்களை போல்!
தொலைத்திட்ட ஆசைகள்!
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு!
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..!
'வருடத்தில் பூக்கும்!
வளைகுடாவின் பசுமையை போலன்றியும்!
வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள்!
தூரத்தின் இடைவெளியில் -!
சிக்கிக் கொண்ட பாரங்களாகவே கனக்கின்றன..!
'எரிக்கும் வெயில்; வலிக்கும் குளிர்!
கண் அடைக்கும் மனற் காற்று!
எல்லாம் கடந்தும் -!
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி!
தீர வதையன்றி வேறில்லை..!
'சான்றிதழ் தூக்கிக் கொண்டு ஏறி இறங்கிய படிகள்,!
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென வெடித்துச் சிரித்த சிரிப்பு,!
விமானத்திலிருந்து இறங்கிய பின் வாங்கிய முதல் சம்பளம்,!
இவை எல்லாவற்றையும் ஈடுகட்ட!
கண்ணீர்தான்!
கண்ணீர்தான் மிச்சமாகுமென!
அன்று தெரியவில்லை -!
முடிகொட்டி!
வாழ்க்கை மொட்டையாகி!
கிழவனென்று பட்டம் சுமந்து ஊர்செல்கையில்!
மிக நன்றாகவே தெரிகிறது;!
'தெரிந்து மட்டுமென்ன செய்ய!
அதோ எனை சுமந்து வந்த விமானம் திரும்பி செல்கையில்!
இங்கிருந்து நிறைய பேரை -!
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது; அதே வதை நோக்கி!!!
02.!
செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர் உறவுகளே!!!
--------------------------------------------------------------------------!
செஞ்சோலை தெருவெல்லாம்!
புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே;!
தமிழ் படித்த சிறுமியின் குரல்!
சப்தம் தொலைத்து கிடக்கிறதே;!
பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம்!
மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே;!
மறக்க இயலா மரணச் சூட்டின் -!
மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் -!
சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் -!
முளைத்தெழு உறவுகளே;!
அடிப்பவனை மன்னிக்கலாம்!
அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை!
திருப்பி அடிக்கும் வரை!
அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே!
மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே;!
செத்தவன் செத்தவளெல்லாம் வெறும்!
சுப்பனும் குப்பனுமல்ல;!
எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் -!
அவர் உறைந்த மண்ணில் மீண்டும்!
புடைசூழ் படையென திரண்டு நில் உறவுகளே;!
தோளிலிட்ட மாலை வாடும் சூட்டிற்குமுன்!
தாலி பறித்தவன் சிங்களவன் -!
அவன் பொட்டில் அரைந்து சொல் - எம்!
விடுதலை எத்தனை வலிதென்று; எம்!
சுதந்திர தேசம் எம் லட்சியமென்று!!
இணைந்து வாழும் வேடம் பூண்டு!
இரந்து நிற்கும் கயவனின் கூட்டம்,!
தூக்கிக் காட்டிய வெள்ளை கொடியை!
தட்டிவிட்டு; சுட்ட அதர்ம வர்க்கம்,!
இரண்டாம் தர இடம் தந்தே எமை!
மரணம் வரை மண்டியிட செயும் மதப்பை!
ஆணவத்தை -!
தகர்த்தெறிய புறப்படு உறவுகளே;!
உயிர் பறிக்கும் கழுகுகளுக்கு!
குழந்தையின் கண்ணீரெப்படி புரியும்?!
உயிர் பறித்து!
ஆடை களைந்து!
நிர்வாணம் ரசித்து!
பிணத்தை புணரும் ஜாதிக்கு; புனிதம் எப்படி புரியும்?!
உயிர்துடிப்பின் சப்தம் அடங்கும் முன்!
உறவுகளை சுட்டெறிந்த வஞ்சகனுக்கு - நாம்!
வாழ்ந்து படைத்த சரித்திரம் மண்ணெனப் பட்டதோ???!
மாண்டவரெல்லாம் ஆண்டவரென்பதை!
கத்தி கதறி ஓலமிட்டு மரணம் நெருங்கிய!
ஒவ்வொரு பிஞ்சுகளின் அழுகையும் -!
காற்றில் ஒலியில் காலத்தின் தலையெழுத்தினில்!
எழுதிவிட்டே தன் இறுதி மூச்சினை நிறுத்தியிருக்குமென!
வெகு விரைவில் பறக்கும் புலிக்கொடி!
எதிரியின் செவிட்டில் அரைந்து சொல்லும்!!
அன்று அடங்கும்!
எம் வீரர்களின் -!
அந்த செஞ்சோலை பிஞ்சுகளின் ஆத்மாக்கள்!!
அதுவரை ஓயாதீர் உறவுகளே
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.