மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!! - வித்யாசாகர்

Photo by Joel Filipe on Unsplash

வாழ்வின் சுவர்களில்!
கொட்டை எழுத்தில்!
எழுதப் படுகிறது மரணம்;!
படிக்க மட்டுமே நாளாகிறது!!
!
எ த்தனையோ பேரின் மரணத்தில்!
நிகழ்வதில்லை பாடம்;!
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்!
மாற்றி விடுகிறது என் பாதையையும்!
வாழ்க்கையையும்,!
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்!
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்!
நிகழ்கிறது -!
தனக்கான மரணம்!!
!
யாரும் பயந்துவிடாதீர்கள்!
பயம் கொள்வதால்!
விட்டாசெல்கிறது மரணம்?!
விட்டு செல்லுங்கள் மரணத்தை!
துணிவிருந்தால் வந்து நம்மை!
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்;!
பெறாத மரணத்தில்!
எனக்கென்னவோ வாழ்வதாகவே!
தெரியவில்லை -!
நிறைய பேரின் வாழ்க்கை!!
!
எ ன்ன தான் மனிதன்!
செய்தாலும் - மனிதனை!
செத்து தொலை என்று!
சொல்ல விடுவதேயில்லை மரணம்;!
மீறி சிலர் சொல்கிறார்கள்!
ஏன்; கொலை கூட செய்கிறார்கள்!
மனிதரற்றோர்;!
மரணம் அவர்களை!
மன்னிப்பதேயில்லை, மாறாக!
தினம் தினம் கொள்கிறது,!
கடைசி ஓர்நாளில்!
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ!
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் நாளில்!
அவர்களை இறந்ததாக -!
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!!
!
பெரிய மிராசுதார்!
பிச்சைக்காரன்!
ஆண்!
பென்!
சாமி!
குடிகாரன்!
திருடன்!
நல்லவன்!
கெட்டவன்!
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;!
ஆனால் -!
நெருங்கும் முன்!
நன்றாக; பார்த்துக் கொள்கிறது
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.