முதல் நாள்!
என் இருக்கையின் அருகே!
நீ அமர்ந்திருந்த போது!
கவனித்தேன்!
உன் கிழிந்த சட்டையை!
என் கைக்குட்டை கொடுத்தேன்!
அதை மறைக்க!
என்!
அம்மாவிடம்!
அடம் பிடித்து!
நான் வங்கி வந்த!
சாக்லேட்டை பாதியை!
உனக்கு உடைத்து கொடுத்தேன்!
நான் பரிட்சையில்!
பெற்ற முதல்!
மதிபெண்ணுகாக!
தந்தை பரிசளித்த சைக்கிளை!
தொலைத்ததாக!
சொல்லி வைத்து!
உன் பிறந்த நாள்!
பரிசாக்கினேன்!
ஒளித்து!
ஒளித்து!
வைத்து எல்லாமே!
உன்னிடம் மட்டுமே!
சொல்ல விழைந்தேன்!
புது உடையில்!
என்னை!
சோபித்துக் கொண்டு!
வரும் போதெல்லாம்!
என் உருண்டோடும்!
கண்களால் கேட்பேன்!
அழகா இருக்கா!
உனக்கு!
ஆங்கிலம்!
சொல்லிகொடுக்க!
நான் பிரயத்தனம்!
செய்யும் போதெல்லாம்!
நமக்குள்!
சர்ச்சைகள் எத்தனிக்கும்!
முதன் முதலில்!
யாரோ ஒருவன்!
எனக்கு காதல் கடிதம்!
எழுதிய போது!
நீ மீசை முறுக்கி கொண்டு!
சண்டை செய்தாய்!
பத்தாம் வகுப்பில்!
என்றே நினைக்கிறன்!
நீ!
ஏதோ!
கல்விச் சுற்றுல்லா!
செல்ல பத்து!
நாட்கள் என்னை!
பிரிந்த போது!
ஆர்பரிக்கும்!
காய்ச்சல் என்னை!
அவதிகுள்ளக்க!
வெட்சி மலர் போன்ற நான்!
வதங்கி கிடந்தேன் .......!
கடைசியாக!
நீ!
எனக்கு!
பிரியா விடையளித்து!
அன்பளிப்பாய் கொடுத்த!
சாவிக் கொத்து!
என் குழந்தையின்!
கையில் அகப்பட்டு!
கிழே விழுந்தபோது!
இந்த நினைவுகள்!
சிதறியது

வே .பத்மாவதி