யாழ்ப்பாணத்து இரவுகள் - இராகவன்

யாழ்ப்பாணத்து இரவுகள் - Tamil Poem (தமிழ் கவிதை) by இராகவன்

Photo by Tom Podmore on Unsplash

ஊரடங்குச் சட்டத்துடன்!
தொடங்குகின்ற!
யாழ்ப்பாணத்து இரவுகள்!
படைக்கலங்களுடன்!
நகர்ந்து செல்கின்றன!
கருணையற்ற விதத்தில்.!
!
நத்தின் அழுகையை!
வண்டின் ரீங்கரிப்பை!
வெட்டுக்கிளியின்!
கிறிச்சிடலை!
சாமக்கோழியின் கூவுதலை!
நாயிடும் ஊளையை!
அனுமதிக்காமல்!
வேட்டொலிகளால் முழுமையாகத்!
தம்மை நிரப்பிக்!
கடந்தேகுகின்றன!
சவ ஊர்வலத்தைப்போல!
தமக்குரித்தான எந்த!
ஒலிப்பிலும்!
பீதியைக் கிளப்பி!
மரண ஒத்திகை நிகழ்த்துவதைத்!
தவிர!
யாழ்ப்பாணத்து இரவுகளிடத்தில்!
எதிர்பார்க்க யாதுமில்லை.!
புதுமுறையிலான கொள்ளையிடலையோ!
அல்லது!
கொலைப்பாதகம் மற்றும்!
கூட்டான வன்புணர்வையே!
ஊரடங்கின் வழியே!
அனுமதிக்கின்ற!
யாழ்ப்பாணத்து இரவுகள்!
சதிகாரர்களைப்போல்!
பல்லிளித்துக் குதிக்கின்றன.!
இந்தப் பல்லிளிப்பை!
மின்வெட்டு நிழற்படமாக்கி!
ஊடகங்களில் விதந்துரைக்க!
இன்னும் நிமிர்ந்து!
செல்கின்றன!
யாழ்ப்பாணத்து இரவுகள்.!
-இராகவன்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.