வைக்கோலில் ஓர் ஒளிப்பிளம்பு - ரமேஷ் சிவஞானம்

Photo by Rahul Himkar on Unsplash

இரண்டாயிரம் ஆண்டுகள் முன்

வைக்கோலில் ஓர்
ஒளிப்பிளம்பு
ஏழ்மையின் விளக்கு
தாழ்மையில் எழுந்தது
மானுடம் பிறந்தது
உலகம் உய்த்தது

உலகம் மீட்க பிறந்த
உத்தமரின்
இத்தினம் முதல்
மனமெங்கணும்
மகிழ்ச்சி மலர்கள்
பூக்கட்டும்...

உன்னொளி எமக்கு
புதுத்தெம்பு தரவேண்டும்
மனஇருள் போக்க
மரணித்தெழுந்த பிதாவே
உன்னருளாலே நம்
உள்ளம் வளரட்டும்
இல்லம் இனிக்கட்டும்

பரிசுத்த ஆவியின்
அற்புத ஒளியினில்
நள்ளிரவுச் சூரியன்
எளிமையாய் பிறந்ததே
உள்ளிருக்கும் மனச்சுமை
இனிக்குறையுமே...

உனது பிறப்பு
உன்னத சேவை
நம் நல்லுறவு
பாசம்
அன்புத்தோழமை
நட்புறவு வளர
இன்னுமின்னும்
நாம் பாடுவோம்
உனக்காக கரோல் கீதங்கள்...
எம்மனம் இப்போது
தூய்மை...
வல்லமை கீதங்கள்
உனக்காக...
என்றும்
நாம் உன்னில்
ரமேஷ் சிவஞானம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.