ஊரறியும்... உறவறியும்... நீயறியாய்... பெண்மனமே! - மன்னார் அமுதன்

Photo by engin akyurt on Unsplash

நமக்குள்!
ஒன்றுமில்லையெனவே!
நாம் முன்மொழிகிறோம்!
வலியின்!
மொழிகளையே!
மனமோ வழிமொழிகிறது!
என் விழிகள்!
திருடுபோயின!
இரவுகளுமென்னை!
ஒதுக்கியே விட்டன!
மெத்தை தணலாக!
தூக்கமும் நானும்!
தூரமாகிப் போனோம்!
உண்ணா நோன்பனை!
உறவாக்கிக் கொண்டது!
யுக்தா!!
என்னுயிர்க் காற்றே!
எங்கேயடி சென்றாய்!
என்னைத் திணறவிட்டு!
மூச்சுத் திணறலோடே!
நகருகின்றன!
நீயில்லாத நாட்கள்!
கண்ணீர் குடித்து வளரும்!
பொழுதுகளின் விழுதுகளில்!
சிக்கிச் சிக்கியே!
சிதிலமடைகிறேன்!
உன் நினைவுகள்!
தின்று தின்றே!
நாள்தோறும் தேய்பிறையாய்!
உருக்குலைகின்றன!
என்னுயிரின் ஓரங்கள்!
இந்த வானம் ... பூமி...!
அந்த மரம்...!
அதன் கீற்றுகளைக்!
கொஞ்சும் காற்று...!
சாலை நடுவில்!
ஏதோ நினைவில்!
நான் மோதப் போன!
முச்சக்கரச் சாரதி...!
என எல்லோரும்!
அறிந்திருக்கிறார்கள்!
உன்னைத் தவிர!
தோள்களில் நீ!
சாய்ந்திருந்த பொழுதுகளைக் கேட்பாயா..!
நான் வாழ்ந்த நிமிடங்களைச்!
சொல்லும்!
விரல்கள் இணைத்து!
நடைபயின்ற வீதியைக் கேளேன்!
சொல்லுமது காதலா? காமமாவென்று?!
உன் கண்ணீரைத் துடைத்த!
கைக்குட்டை கூட!
இன்னும் ஈரமாய்!
என் நினைவுகளில்!
என்றோ எவனோ!
அணைத்த தீயிற்காய்!
நீயேன் இன்னும் எரிகிறாய்!
மாமிசம் சுவைத்தும்!
எலும்பைக் காக்கும் பிராணியாய்!
இன்னும் ஏனடி!
கசப்பைக் காவித் திரிகிறாய் !
தொடுகைகள் பிழையோ?!
உரைப்பாய் - உன்!
தொடுகையில் பனியாய்!
உறைந்தேன், பிழையோ?!
உணர்வினைச் சிலுவையில்!
அறைகிறாய் சரியோ?- சிலுவையைச்!
சுகமாய்ச் சுமத்தலும் முறையோ?!
மலரைச் சூழ்ந்து!
அதரம் கடித்தேன்!
தேனைச் சுவைத்தேன்!
தேடிப் புசித்தேன்!
தேனை ருசிக்கவோ!
பூவை அழகென்றேன்?!
பூவை! நீ சொல்..!
நமக்குள்!
ஒன்றுமில்லையெனவே!
நாம் முன்மொழிகிறோம்!
வலியின்!
மொழிகளையே!
மனமோ வழிமொழிகிறது!
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.