இருண்டே
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை
வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத்
தலைமுட்டும் வீடென்றும்
எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்
நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை
எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்தினாய்
புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்

மன்னார் அமுதன்