புறக்கணிப்பு - மன்னார் அமுதன்

Photo by Hamed Daram on Unsplash

 

இருண்டே
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை
 
வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத்
தலைமுட்டும் வீடென்றும்
 
எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்
 
நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை
 
எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு

என்னைப் போர்த்தினாய்
 
புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்
 
மன்னார் அமுதன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.