தலைவலியோடு எழும்போதே!
பேயைப் பற்றி !
பேசிக்கொண்டிருந்தான்!
கண்கள் சிவத்தும்!
நரம்புகள் புடைத்தும்!
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்!
பேயடித்ததால் !
வீங்கிக் கிடக்கிறது!
சோற்றுப் பானையும்!
மனைவியின் முகமும் !
ஆறொன்று !
ஓடி மறைந்த வடுவாய் !
காய்ந்திருந்தது !
பேய் கழித்த சிறுநீர்!
வெட்டியெடுத்த மண்போட்டு!
மறைக்கப்பட்டிருந்தது!
அதன் வாந்தி !
வந்ததற்கான!
எல்லா அடையாளங்களையும்!
விட்டே சென்றிருந்தது பேய்!
அலங்கார அறையொன்றில்!
பேயைக் காட்டுவதாய்!
அழைத்தான்!
அங்கு பேயுடைத்த !
கண்ணாடிச் சில்லுகளில்!
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது!
எனது முகம்!

மன்னார் அமுதன்