ஒரு திருமணவிழாவில் - க.அருணபாரதி

Photo by FLY:D on Unsplash

நம் கல்லூரித்!
தோழியின் திருமணம்..!
தோழிக்கு!
மிகநெருக்கமான!
தோழி நீ என்பதால்!
வருவாய் என்ற!
நம்பிக்கையுடன்!
தோழனாக நானும்!
வந்தேன்..!
நம்பிக்கை வீண்!
போகவில்லை..!
கோபம் கலந்த!
மெல்லிய பார்வையோடு!
அமர்ந்திருந்தாய்..!
நீ பேசுவாய்!
என்று நானும்,!
நான் பேசுவேன்!
என்று நீயும்,!
ஒருவொருக்கொருவர்!
மனதிற்குள் நினைத்து!
இறுதிவரை!
பேசாமலேயே!
இருந்தோம்..!
பலமாதங்கள்!
இடைவெளிக்குபின்!
நண்பர்கள் எல்லோரும்!
வந்தார்கள்..!
பிரிவின் வலியை!
சிரித்து கழித்தோம்..!
சிலர் மாறியிருந்தனர்!
சிலர் மாற்றங்களை!
எதிர்நோக்கி இருந்தனர்...!
என்னைத் தவிர!
எல்லோரையம்!
அன்புடன் நீ!
நலம் விசாரித்தாய்..!
அதுவரை நலமாய்!
இருந்தநான்!
நலமிழந்து நின்றேன்..!
மனதிற்குள் குழப்பம்!
கனவுக்குள் வெப்பம்!
இனிமைக்கு பெயர்போன!
காதல் வாழ்வினில்தான்!
எத்தனை எத்தனை!
துன்பங்கள்..!
பக்கத்தில் இருந்தபோது!
பேசாத என்மனம்,!
விட்டுவிலகி!
வீடு செல்லும்பொழுது!
பேசியது, என்னோடு..!
ஏசியது நெஞ்சோடு..!
வேண்டாமென என்னை!
வெறுத்தாலும் கூட!
சிறுபுன்னகை தந்து!
சினம் ஆற்றியவள்!
என் தேவதை..!
இருமனங்கள் சேரும்!
திருமணவிழாவில்!
பிரிந்தன எங்கள்!
இருமனங்கள்..!
திரும்ப எப்பொழுது!
காண்பேன் என!
அரும்பிய மெல்லிய!
வினாக்களோடு!
விடைபெற்றோம்..!
-----------------------------------!
பாதையை தேடாதே.. உருவாக்கு!
- புரட்சியாளர் லெனின் -!
------------------------------------!
தோழமையுடன்
க.அருணபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.