தமிழனின் சரித்திரம் - காயத்ரி பாலாஜி

Photo by Jr Korpa on Unsplash

 
இறைவன் படைப்பினில்....
இவர்கள் ஒரு சரித்திரம்...
பிறக்கும் போதே...இவர்கள்...
இறப்புச் சான்றிதழுடன் பிறக்கிறார்கள்...
இன்றும் அகதிகளாய் தொடரும்...
இவர்கள் வாழ்க்கை....

இங்கே இவர்கள் அண்ணாந்து வானம் பார்ப்பது....
பருவ மழைக்காக அல்ல.....
பட்டாளத்தார்கள் போடும் ....
பயங்கர குண்டுகளுக்காக ..
இங்கே பூமியைத் தோண்டினால்...
நீர் ஊற்றெடுப்பதில்லை...
உதிரம் தான் ஊற்றெடுக்கும்...

இதயமில்லாதவர்களால் ...இவர்கள்..
உடலிலும்..உள்ளத்திலும் காயம் பட்டவர்கள்....
இனப் போராளிகளென இகழப்பட்டவர்கள்...
கடைசி தமிழனும் இங்கே...
புதைக்கப்பட்டாலும்....
இவர்கள் சிந்திய உதிரம்...
இன்னும் உங்கள் மண்ணிலே...
ஜீவித்திருக்கும்...!
 
காயத்ரி பாலாஜி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.