பூக்களை ஏந்திக் கொண்டவன்!
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்!
தனித்த பசிக்குச் சுய சமையலையும்!
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்!
மனதோடு இசைக்கப் பாடல்களையும்!
அருகிலிருந்து சொல்லித் தந்தவன் !
சொல்லியோ சொல்லாமலோ!
அன்பின் பிடியிலிருந்து!
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை!
தெரியாமலே போயிற்று !
இறுதியில் தெரிந்தது!
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த!
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்!
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று!
பார்த்துப் பார்த்து மகிழும்படியான!
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது !
சிலவேளை வெயிலும்!
சிலவேளை மழை இருட்டுமாக!
இப்பொழுதெல்லாம் காலம்!
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது!
சிலவேளை பனியைத் தூவியும்!
சிலவேளை!
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்
எம்.ரிஷான் ஷெரீப்