என் துணைவி - யசோதா காந்த்

Photo by engin akyurt on Unsplash

யாராய் இருந்தாள் அவள் எனக்கு !
அன்பு மிகு அன்னையாய் !
அறிவு சொல்லும் ஆசிரியையாய்!
பணிவிடைகள் செய்யும் செவிலியாய் !
எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாய் !
சில நேரங்களில் சண்டைக்காரியாய்!
பல நேரங்களில் குழந்தையாய் !
மணமுடித்த நாள் முதல் !
மகிழ்ச்சிக்கு குறைவே இல்லையே !
யார் கண் பட்டதோ !
மாயமாய் மறைந்து விட்டாளே!
சுமங்கலியாய் போய் சேர வேண்டும் என்பாள் !
அடிக்கடி சொல்லும் வாரத்தை அது !
அரங்கேறி போனதே !
எமனும் அவள் சொல் கேட்டதேன் ? !
ஒரு நொடியும் பிரியாத நான் !
எப்படி அவளின்றி நிரந்தரமாய் ? !
என் தோல்வி நேரங்களில் !
வெற்றிப்பாதை காட்டியவளே !
இனி யார் என் மனம் தெரிந்து நடப்பார் ???!
யார் என் காது மடல் வருடி கொடுத்து தூங்க செய்வார் ?? .. !
யாரிடம் என் வரவு செலவு சொல்வேன் ??.. !
கண்ணை காட்டில் விட்டாளே !
அழகே உன் பூமுகம் எங்கே ?? !
சகியே உன் புன்னகை எங்கே ?? !
ஓ காலனே வா வா வா .. !
என்னையும் அழைத்து போ போ போ
யசோதா காந்த்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.