மறையாத மகாத்மாக்கள் - யாழினி அத்தன்

Photo by FLY:D on Unsplash

(யாழினி அத்தன்)!
தேசிய மகாத்மாக்கள்!
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்!
காகிதங்களில்;!
ரூபாயாக!
டாலராக!
ரூபிளாக!
அந்தந்த நாட்டு!
திறந்தவெளி!
காகிதச் சிறைகளில்;!
பணங்களின் !
முகப்பில் பவனி !
வருகிறார்கள்!
மனித மனங்களில்!
மறந்துவிட்டபடியால்.!
மெலிதாய் உதிர்க்கிறார்கள்!
புன்னகையை!
செல்வந்தன் பெட்டியில்!
சிறைப்பட்ட சோகமா!
ஏழையின் வயிற்றை!
நிரப்பிய மகிழ்ச்சியாவென்று!
அறிந்து கொள்ள முடியாதபடி;!
அவர் புன்னகை!
ஏழையின் கைகளில்!
ஜொலிக்க!
அவன் ஒளிர்விடும்!
சிரிப்பில் தெரியும்!
இறைவன் இருப்பு;!
கைவிட்டு கைமாறி!
கசங்கி கிழிந்து !
வாடிப் போயிருந்தும்!
வாடாமல் மனிதர்களை!
வாழ செய்து !
மறைந்தும் மறக்காத !
அவர் தியாகங்கள்;!
கொள்கைக்கு எதிராய் !
துவேஷக் கொடிகள் !
பிடித்த பகைவர் !
விரல்கள் ஐந்தும்!
இப்போது தடவி !
மகிழ்கின்றன!
அவர் முகப்பை; !
மகாத்மாக்கள் மறைவதில்லை!
நூல்களின் உரைப்பில்!
பொதிந்து கிடக்கும்!
உண்மைகள் குலுங்கிச்!
சிரிக்கின்றன எங்கோ!
பதுங்கி நின்று;
யாழினி அத்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.