பச்சிளங் குழந்தை.. பூவின்.. கடவுளாய் - வை. அண்ணாஸாமி

Photo by Jr Korpa on Unsplash

பச்சிளங் குழந்தை.. பூவின் கூற்று.. கடவுளாய் என்றும்!
01.!
பச்சிளங் குழந்தை!
-------------------------!
ஒருவரிக் கவிதை! காண்போரின் கவலைகளை!
சுருக்கியே வாழ்வில் சுவைகூட்டும் நல்லதோர் மருந்து.!
ஒவ்வோர் அசைவும் நமக்கு ஊட்ட்ம்தான்.!
எவ்விதம் மறப்பார் இவ்வின்பத்தை.!
சிரிப்பினை, ஈர்க்கும் சின்ன இதழ்!
விரிப்பினை கண்டு மயங்காதோர் உண்டோ? அரிதான!
இறைவன் இவந்தானோ? பன்னாட்கள் 'பளிச்சென்ற'!
பிறைனுதல் நம்வீட்டு வானிலும்!!
!
02.!
பூவின் கூற்று!
-----------------!
வானமே, நீவிரிந்து படர்ந்து கிடந்தாலும்,!
மனம் கவரும் வண்ணக் கலவை உனக்குண்டோ?!
சுவையான தேனையடக்கும் திறமையும் என்னுள்.!
கவிகளின் கற்பனை 'ஊற்றும்'நானே!
!
03.!
கடவுளாய் என்றும்...!
---------------------------!
கடவுளாய் என்றும் எண்ணும் மனிதன்-அதனைக்!
கடந்து மனிதனாய் வாழும் புனிதன்.!
மனிதனையும் கடவுளையும் கண்முன்னே ஒருங்கே,!
தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்
வை. அண்ணாஸாமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.