நான் பைத்தியம் ஆன கதை - உஜிலாதேவி

Photo by Sajad Nori on Unsplash

சந்தைக்கு போன!
அண்ணன்!
சாயங்காலம் வரும்போது!
சகதியோடு!
வந்து நின்றான்!
ஏனிந்த கோலமென்று!
இடைமறித்து கேட்கையில்!
இதுதான்!
கட்சி கொள்கை என்றான்!
அறுவடைக்கு!
போன அப்பா!
அரைநாளில்!
திரும்பி வந்து!
திருவோட்டை கையில் தந்தார்!
சோறு போட்ட!
நிலமெல்லாம்!
கூறுபட்டு மனையாச்சி!
ஓடுதான்!
மீதமென்றார்!
அம்மாவின்!
வளையலை!
அடகு வைத்த காசில்!
கல்லூரி போன தம்பி!
கண்ணிரண்டும்!
குருடாகி!
வாசலில் வந்து!
விழுந்தான்!
கவர்ந்த நடிகருக்கு!
கற்பூரம் காட்டும்போது!
கண்களை!
சுட்டதென்றான்!
ஆசைக் கனவுகளை!
அள்ளி சுமந்தப்படி!
பள்ளிக் கூடம்!
போன தங்கை!
கூடாததை!
படித்து விட்டு!
கருகலைக்க காசு கேட்டாள்!
அப்பாவின்!
முதுகில்!
ஆயிரம் சுமையேற!
கணவன்!
வீடு!
போன அக்கா!
குடிகார புருஷனிடம்!
விடுதலை!
வாங்கித் தாவென்றாள்!
மலையேறி படியேறி !
மண்ணில்!
உருண்டு புரண்டு!
கடுந்தவம்!
இருந்து பெற்ற பிள்ளை!
பாலுக்கு!
அழும்போது!
பரிதவிக்க!
விட்டுவிட்டு!
பத்தினியோ தொடரை' பார்த்தாள்!
இத்தனையும்!
நடக்கும் போது!
என்னினிய அம்மாவோ!
அம்மனுக்கு கூழ் வார்த்தாள் !
!
நெருப்பு பொறி!
வந்து!
கண்களை ஒருபுரம்!
குத்த!
கால் கையில்!
ஆயிரம் விலங்கு விழ!
எப்படி நான்!
வாழ்வெதென்று!
எதுவுமே புரியாமல்!
மனநல!
வைத்தியரிடம்!
மருந்துக்கு நானும் வந்தேன்
உஜிலாதேவி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.