மரங்கொத்தி - டீன்கபூர்

Photo by Denise Bossarte on Unsplash

வரலாம் இனி!
தென்னையைப் போல வெறும் ஈர்க்குக் குடல்…!
இவனிலிருந்து வராது!
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்!
உன் சொண்டில் வரும்!
நரம்புகளும் அதில் சிக்கும்.!
உலாவப் பிறந்தவன் மனிதன்!
தென்றலை உடலுக்குள் குடில் கட்டிக் கொடுப்பவன்!
இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்!
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று!
வளரும் மரம் போல நகராமல்!
அடியைப் பதி;க்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்!
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.!
கடல் சார்ந்த இடம்!
வயல் சார்ந்த இடம்!
யுத்தம் மேய்கின்ற பூமியாகக் கிடக்கின்றது.!
மொத்தத்தில் இவன் ஜடம்!
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்!
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை!
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி !
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து!
‘போர்’ ஒன்றைச் செய்து!
இல்லறம் நடத்திய போதும் குருவி….!
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்!
நம்பி!
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை!
இவன் உடம்பில் வந்து தங்கு!
தோளில் நின்று எச்சில் அடி…!
ஒரு போரை வடிவமைக்க!
இவன் நெஞ்சிலோ!
முதுகிலோ நின்று கொத்து!
மரமான இம்மனிதனின்.!
டீன்கபூர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.