முதலிரவு .. சூரியனைச்.. தெளிந்த - தமிழ் யாளி

Photo by Tengyart on Unsplash

முதலிரவு ஆலோசனை.. சூரியனைச் சுட்ட நெருப்பு.. தெளிந்த நல்நீரும் காற்றும்!
01.!
முதலிரவு ஆலோசனை!
---------------------------------!
நான் ஒரு கன்னிமாறா!
நூலகம் இன்னும்!
விற்கப்படாத விலை!
போகாத புத்தகம்!
என் அப்பனின் இரவுக்!
கவிதையின் முதல்!
பதிப்பு சந்தைக்கு!
வந்து முழுமையாக!
முப்பதாகிறது!
தினம் தினம் எங்கள்!
வீட்டில் ...!
கண்காட்சி வருகிற!
விழிகள் எல்லாம்!
உருட்டியும் புரட்டியும்!
பார்க்கும்!
பாட்டு படிப்பு பண்பு!
என்பது பவுனில்!
வந்து முடியும்!
ஐம்பது நாற்பது!
முப்பது இருபது!
இனியும் முடியாது!
எழுந்திரு!
என் திருமணச்!
சேமிப்பிற்காக எங்கள்!
வீட்டு வயிறுகள்!
பசிக்கு பட்டினியையே!
செரித்து வளர!
பழகிவிட்டன!
ஆகையால் அவை!
உண்ணா விரதம்!
என்பதை ஒரு நாளும்!
உச்சரித்தது இல்லை!
எனக்காக அவிழ்த்த!
கோவணத்தை என்!
அப்பன் இன்னும்!
கட்டவில்லை!
அருணாக்கயிற்றை!
அடமானம்!
வச்சுத்தான்!
மூன்றாம் வருடத்!
தேர்வை முழுசா!
எழுதினேன்!
இனியும் தட்சணை!
கொடுத்து தாரமாக்க!
அப்பனுக்கோ!
வக்கனை இல்லை!
ஆகையால்!
இன்னும் சில!
நாட்களில்!
அறுபதுக்கோ ... எழுபதுக்கோ ...!
நாளைய பிணத்திற்கு!
இன்றே!
மலர்வளையமாக!
நான் மாறக்கூடும்!
அங்கேயும் வந்து!
மொய் எழுதி ...!
முதலிரவு!
ஆலோசனை கூறாமல்!
உங்கள் எதிர்!
வீட்டிலும் என்னைப்!
போல் இன்னொருத்தி அவளது முகம்!
பார்த்தே!
கண்ணாடியின் பாதரசம் பழுதடைந்து!
கொண்டிருக்கலாம்!
அவளை முதலில் .!!
கரையேற்றுங்கள் ...!
!
02.!
சூரியனைச் சுட்ட நெருப்பு!
-------------------------------------!
பாரதி ... நீ!
சூரியனைச் சுட்ட நெருப்பு- புயலை எரித்த புதுத் தென்றல்!
மலையை உடைத்து எரிந்த தமிழ் உளி!
நீ ... உன் எழுத்து ஏவுகணைகளை ஏந்தியபோதுதான் அந்த பருத்த பீரங்கிகளுக்கும் பயம்வந்தது!
கருவை மட்டும் சுமந்த எங்கள் பெண்கள் கவியை சுமந்ததும்உன்னாள் தான்!
தமிழ் தாயும் மார்தட்டிக்!
கொள்கிறாள் உன்னாள் தமிழ்பபாலை எங்களுக்கு முலை ஊட்டியதற்காக!
உன் கனல் வரிகளைக்!
கொஞ்சம் கடன் கொடுப்பாயா எங்கள் உரிமைக்கூழ் காய்ச்ச உலை வைக்க வேண்டும்.!
03.!
தெளிந்த நல்நீரும் காற்றும்!
--------------------------------------!
நாகரீகச் சேறு வழுக்கி!
நவீனப் பள்ளத்தாக்கில்!
விழுந்து மரணத்தோடு!
போராடும் மனிதனுக்கு!
அவசரத்தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
கூவ நீருக்கும்!
குழாய் நீருக்கும்!
தற்சமயம் நிறபேதம்!
மட்டும் தான்!
இனி குடிமட்டுமல்ல!
குடிநீரும் குடியைக்!
கெடுக்கும்!
கந்தகமும்!
கரியமிலமும் காற்றோடு!
கலப்புமணம்!
புரிந்ததால்!
சுத்தக்காற்று!
வார்த்தையில் மட்டும்!
இனி காச நோயினும்!
காற்று நோய்!
கொடியது!
நிக்கோடினால்!
தேய்பிறையான!
நுரையீரலுக்ககும்!
ஒளிச்சேர்க்கைக்கும்!
கூட திறனிழந்த!
இளந்தளிர்களுக்கும்!
அவசியத் தேவை!
தெளிந்த நல்நீரும்!
காற்றும்!
எழுதியது
தமிழ் யாளி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.