தேவதை வருகிறாள் - தி.ராஜகோபாலன்

Photo by Marek Piwnicki on Unsplash

தவம் கிடந்தார்கள் தரிசனத்திற்காக !
வலம் வந்தார்கள் ப்ரதக்ஷினமாக !
பூக்கொடுத்தர்கள் அர்ச்சனையாக !
எவனையும் பொருட்படுத்தவில்லை !
நிச்சயம் அவள் தேவதைதான். !
நான் ஒன்றும் நாத்திகன் அல்ல அவளை மறுப்பதற்கு. !
வற்றாத அன்பும் ஈர்ப்பும் எந்நாளும் நெஞ்சில் உண்டு. !
தூசியாக அவள் என்னை துச்சமாக மதித்தாலும், !
மாசில்லா காதல் என்தன் மனதிற்குள் ஊற்றெடுக்கும் !
என்றாலும் அவளுக்கு ஏற்றவன் நானில்லை. !
விலையற்ற வைரத்தை, தங்கத்தில் பதிப்பார்களேயன்றி !
தகரத்தில் பதிப்பதில்லை. !
கொம்புத்தேனை முடவன் விரும்பக்கூடாதா? !
அவனுக்கு கால்கள்தான் இல்லை, நாக்கு இருக்கிறதே. !
எண்ணத்தை ஈடேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். !
எண்ணுவதையே தடைசெய்யும் பொல்லாத உலகமன்றோ! !
சத்தியம் சொல்கின்றேன். !
நெஞ்சத்திலிருந்து அவள் எண்ணத்தை இப்போதே நீக்கிவிட்டேன் . !
என்றைக்கும் அவளை இனி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. !
என்றாவது என் முன்னே அவள் எதிர்ப்பட்டுவிட்டு விட்டால், !
பாடுபட்ட நிஷ்டை எல்லாம் பாழாகிப்போய்விடுமே. !
அவள் கொலுசொலி கேட்கும்போதே கண்களை இறுக மூடிவிட்டால், !
விளையவிருக்கும் முட்செடியை முளையும்போதே தடுத்திடலாம். !
யோசனை என்று வந்துவிட்டால் சாணக்கியனுக்கும் சளைத்தவன் நானில்லை. !
அந்த கொலுசொலி எப்போது கேட்குமென்று எதிர்பார்த்தபடி நெஞ்சம்
தி.ராஜகோபாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.