பிளவு - தான்யா

Photo by Tengyart on Unsplash

அவனைக் காணும் போதெல்லாம் !
ஏற்படும் இயல்பது, !
ஏதோ ஒரு கணம் நின்று !
கதைபேசி !
பின் பிணக்காகி !
சிதறும். !
நம்பிக்கையற்ற நம்பிக்கை அது !
அந்தரங்கத்தில் ஏற்படும் !
அருவருப்பைப் போல சிதறுண்டு போகும் !
குப்பிகளைத் தாண்ட விரும்பாத !
புத்தி அது. !
எல்லாவற்றையும் தாண்ட விளையும் !
புத்தி இது. !
எங்கே அந்த உருபிழந்த உருவங்கள்! !
எங்கெங்கோ சிதறுண்டு !
ஒட்டி வைத்த ஒட்டடைகள் !
சொல்லாமல் தொடர்ந்து கொல்லும் !
வேர்கள் !
வேதனையில் சிதறுண்ட உருக்கள் !
இவற்றுக்குள் வாழும் ஐந்துக்கள் !
ஆதி தேடி நாங்கள் !
-தான்யா !
நன்றி: உயிர்நிழல்
தான்யா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.