எவ்வளவு அழகியது அம் மாலை நேரம் - ஷஸிகா அமாலி

Photo by Pat Whelen on Unsplash

மழைக் காலநிலையென்ற போதும்!
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்!
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது!
நாங்கள் அமர்ந்திருந்தோம்!
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்!
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத!
கதைத்துக் கொள்ளாத போதிலும்!
இதயங்களில் ஒன்றே உள்ள,!
கவிதைகள் எழுதிய போதிலும்!
வாழ்க்கையை விற்கச் செல்லாத!
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற!
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்!
காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்!
வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்!
வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்!
எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்
ஷஸிகா அமாலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.