எல்லாம் சுகமே...., என்னைத் தவிர - ஸ்ரீமதி

Photo by Jr Korpa on Unsplash

கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுறங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........
 
ஸ்ரீமதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.