காதலே உன்னை என்ன செய்ய - றஞ்சினி

Photo by Jan Huber on Unsplash

பகலா இரவா புரியாத காலநிலை!
எப்போதுமின்றி!
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது!
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது!
என்னை அந்தரத்தில்!
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது!
சில மணித்தியால சலனங்கள்!
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்!
ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது!
அன்பாய் உன்னை வருட முடியாது!
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது!
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்!
அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா!
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக!
என் உணர்வுகளே உங்களுக்கு !!
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை!
எப்போதும்!
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது!
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்!
போவதுமில்லை இப்போ.!
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக!
இன்னும் எத்தனை காலம்தான் நான்..!
வயது வரம்புகள்!
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்!
பார்க்காது!
வினோதமான உறவுகளை எப்போதும்!
விதைத்த படி நீ.!
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்!
என்னுடனே!
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்!
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய
றஞ்சினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.