எண்ணங்கள் - ராகினி

Photo by Jr Korpa on Unsplash

கண்ணில் கருக்கொள்ளும்
கனவுகள் என்
இதயத்தைக் குத்திக்
கிழித்திட்ட போதும்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.

விடியும் பொழுதுகளை வசந்தமாய்
ஏற்படுத்த நினைக்கும் போது
காற்றாக வந்து
என் மௌனத்தை
உடைக்கிறாய்

பேச மறுக்கும் என்னை
பேச வைத்துப் பார்க்கத் துடிக்கும்
உன்னைப் பிடிக்கவும் இல்லை
விட முடியவும் இல்லை
ராகினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.