அன்னை பூபதிக்காக - பவித்திரா

Photo by Sajad Nori on Unsplash

கனடாவிலிருந்து பவித்திரா !
அகம்நிறை வாழ்கின்ற அன்புடைத் தெய்வமே! !
அகிம்சைவழி வாழ்ந்திட்ட அன்னை பூபதியே! !
இகமிங் குள்ளவரை என்றும் நிலைத்திடும் !
இணையிலாப் புகழ்பூத்த இன்னுயிர் மாதே! !
தகவுடை மங்கையர் திலகமே! தாயே! !
தக்கவோர் கவிபுனைந்து தாள்மீது படைத்திட !
மகள்நான் விருப்புற்றேன் மனத்துயர் வெளிப்படுத்தி!!
மறைவின்றி வடிக்கின்றேன்! மனமுவந்து விடைதருக!!
சிங்களத்தின் கொடுமையிற் சீற்றமுற்று நாமிருக்க !
சிந்திய இரத்தமது உலர்ந்து வற்றுமுன்னே !
வங்கக் கடல்கடந்து வந்தனர்வாழ் வளிக்கவென !
வஞ்சம்செய் உளத்தினராய் வலிந்தங்கு புகுந்தனர்! !
இங்குற்ற மாந்தரெலாம் இனிதே மகிழ்ந்திருக்க !
இனியெமக் குத்துயரில்லை யெனக்கூறி நிமிர்ந்திருக்கப் !
பொங்கிடும் மெய்யுணர்விற் கண்டனையோ அவர்குள்ளம்? !
பொறுத்திருந்து செயற்படுத்தக் கொண்டனையோ திருவுளம்? !
அமைதிபேண வந்தவரோ ஆக்கிரமிப் பாளரானார்!!
ஆண்பெண் கிழவரொடு குழவியெனப் பேதமின்றி !
எமையெண்ணிப் பார்த்திடா எரித்தும் புதைத்தும் !
அளவிட முடியாத் தீமைகள் புரிகையிலே !
தமையுணர்ந்து மட்டுநகர் மங்கையர் விழித்தெழத் !
தலைவியாய் முன்வந் துண்ணா நோன்பிருந்து !
இமயமே சரிந்திட இன்னுயிர் ஈய்ந்திட்ட !
எம்முயிர்த் தாயேஎன் வினாவிற்குப் பதிலென்ன? !
இன்றுநாம் உனக்கான விழாக்காணும் பொழுதினிலே!
இன்துயில் புரிகின்ற பூங்காவின் நடுவினிலே !
நன்றிலா விடயங்கள் நாடோறும் கண்டுமே !
நானிலமும் மனம்நொந்து நயனநீர் சொரிகிறதே! !
பன்றிகளாய் மனிதவினம் மாறுதல்தான் ஏன்தாயே? !
பகைவருடன் கரம்கோத்துப் பாலகரைக் கொல்லுதலும் !
ஒன்றிணைந்து பிரிவினைகள் மழலைகட்கு ஊட்டுதலும் !
உன்மனதை வருத்தலையோ? உண்மைதனை விளம்பம்மா! !
!
அன்னையே உன்நிலம் ஆண்டாண்டு காலமதாய் !
அரக்கரின் அழிவிற்குள் அடங்கியதும், ஆங்கே !
அந்நியரின் வரவதனால் அவர்பால் விளைநிலங்கள் !
ஆனதனால் உன்னினம் அபலைகளாய் மாறி !
இன்னுயிர்கள் துறந்தும் இடப்பெயர்வால் நலிந்தும் !
ஏழ்மையுறு வாழ்வுடனே ஏதிலிக ளாகிடத் !
தன்னின வரலாற்றைத் தெரிந்துமே சிலரங்கு !
சதியின் வசமானாரே! தாழ்வுற்றுப் போதற்கோ? !
வடக்கைமட்டும் ஏற்றிடுக! கிழக்கைநீர் மறந்திடுக! !
வளமான வாழ்வங்கு வழியமைத்துக் கொடுத்திடுவோம்! !
துடுக்குத் தனமாகத் தொடுத்தனர் சொல்லம்பு! !
துடித்தெழுந் தான்தம்பி துட்டரை நோக்கியங்கு !
திடமாகப் பதிலுரைத்தான்! தினவெடுத்த தோளுடனே! !
தனித்தமி ழீழமொன்றே தாரகமொழி யென்றான்! !
கடிதென மொழிந்தவுரை காத்ததுன் மண்தனை !
கயவர்க ளறிவாரோ தியாகத்தின் மேன்மைதனை? !
பருகிடும் தாய்ப்பாலின் சுவைதனிலே பிரிவுண்டோ?!
பாய்கின்ற குருதியிலும் நிறவேறு பாடுண்டோ? !
பிரபாகரன் என்னும் பெருந்தலைவன் மட்டுமன்றிப் !
பிணைந்து களம்புகுந்த புலிப்படை மறவரும் !
பிரதேசம் பேசவில்லை! பிறர்தமரென எண்ணவில்லை! !
பிறந்தமண் காத்திட ஒருமித்துக் களம்புகுந்தார்! !
பெருநிலத்தின் விடிவெண்ணி நீபுரிந்த தியாகமும் !
பயனற்றுப் போனதுவோ? பகர்ந்திடுவாய் தாயே! !
பண்கெட்டுப் போனதான பாடல்கள் போன்றும், !
பாதியாய்ப் பகிர்ந்தெடுத்த பளிங்குச் சிலைனெவும், !
மண்பிரிக்கப் புறப்பட்டார்! மாண்புறுமோ தாயே? !
மன்னுமுயிர்க் கழிவில்லை, மாநிலத்தே யாதலினாற் !
கண்திறந்து பாரம்மா! கல்லறைகள் விடுத்தெழுந்து !
கண்மணிகள் தனைச்சேர்த்துக் காத்திடப் புறப்படுக!!
எண்ணும் பொழுதிலென் இதயமே குமுறுதம்மா! !
ஈனரின்அறி வீனத்தால் உன்உள்ளமும் வெந்ததோ? !
முடிவான கருத்தொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்! !
மனத்தின்கண் மாசகற்றி மனிதத்துடன் வேண்டுகிறேன்! !
படித்தவர், பாமரர், பயிலுனர் யாராயினும் !
பிரதேச வாதமெனும் புற்றுநோய்க் கிருமிதனை !
நொடியினில் அகத்தினின்றும் நொருக்கிடுதல் வேண்டும்! !
நு£லளவு தங்கிடினும் நோய் பெரிதாகி !
விடிவுதனைத் தடுத்திடும்! வேதனையை அளித்திடும்!!
வளமான எதிர்காலம் அழிதற்குத் துணைபோகும்
பவித்திரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.