உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடுமில்லை - புகாரி

Photo by FLY:D on Unsplash

தத்தித் தித்தித் !
தங்கநிலவே - நீ !
தாவணிப் பூவுக்குள் பூவானாய்! !
முத்துத் தெறித்திடும் !
மெய்யழகே - நீ !
முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் ! !
பெத்த மனங்களின் !
பொந்துகளில் - நீ !
பிறந்ததும் மீட்டிய குரலிருக்கு ! !
எத்தனை வளர்ந்து !
நிமிர்ந்தாலும் - உனை !
எடுத்தே கொஞ்சிடும் உயிரெனக்கு ! !
பத்துத் திங்கள் !
சுமந்தவளும் - உன் !
பருவம் கண்டே வியக்கின்றாள்! !
ரத்த ழையின் !
சின்னவனும் - நீ !
ரத்தினத் தீவெனக் கூவுகின்றான் ! !
நித்தம் ஒளிரும் !
நெற்றிமொட்டே - என் !
நெஞ்சலே¢ வளரும் தாலாட்டே! !
புத்தம் புதிய !
மழைத்துளியே - நீ !
பேசிடும் மொழியும் தேனிசையே! !
முத்தக் காட்டில் !
விட்டுவைத்தேன் - நீ !
மூர்ச்சையாகிப் போகவில்லை ! !
கட்டித் தழுவி !
நொறுக்கிவைத்தேன் - உன் !
கண்களில் தாகம் தீரவில்லை ! !
எத்தனைப் பாசம் !
பொன்னழகே - நீ !
ஏணிக்கு எட்டாத வெண்ணிலவே! !
பொத்திய கைக்குள் !
வைரமென்றே - உனைப் !
பெற்ற நிறைவுக்கு ஈடுமில்லை
புகாரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.