வானங்கள், பூமிகள் மீது சத்தியமாக - பர்ஸான்.ஏ.ஆர்

Photo by engin akyurt on Unsplash

குளிர்ந்து கிடக்கும் என் நிலத்தின்!
குளிர்ச்சியடையும் முன்னான!
மூக்கையரிக்கும் மிக இனிய சுவாசத்தினிதம்!
மனதினுள்ளே புதைந்து புதைந்து விருட்சமாகி விட்டது..!
அந்த நினைவனுபவத்தின் முதிர்ச்சிகள்!
உன் மீதான வாசிப்பின் பின் பகிர்தலில்!
உன்னாலே காவு கொள்ளப்படுகிறது.!
எனது மிகச்சிறிய பருவத்தின் ஆரம்பமே!
உன் காவுகளின் பிரதிகளை!
என்மீது பதியவிட்டுக்கொண்டே வளர்ந்தது.!
நீங்கள் எத்தனைபேர்/நிலங்கள்!
காவுக்காய் அல்லாஹ்வால் படைக்கப்பட்டீர்கள்..?!
சில இடங்களில் தமிழிலுள்ள கெளரவ வசனங்களால்!
நீ முகமறைக்கிறாய்!
அதுவொரு துன்பியல் நிகழ்வு.!
இசை நிரம்பிக்கிடக்கும்!
எனக்கேயான நீண்ட கடலினை காவிவிட்ட சுனாமியைவிட!
உன் ஆணவமும் திமிரும் மிகக்கடும் கொடிய கேவலம்.!
உன் பலவீனங்களுடன்!
நீதானே திரையிட்டுக்கொண்ட அதிகாரம்.!
இறுகிப்போன உனது அதிகாரம்!
மழைபோல் கொட்டித்தீர்த்துவிட்டு!
செய்வதறியாது திகைத்து நிற்பாய்/நிற்கும் எப்போதும்,!
உன்னிடம்தானே நிறம்பிக்கிடக்கிறது!
கெளரவ வசனங்கள்.!
--பர்ஸான்.ஏஆர். !
04.07.2007
பர்ஸான்.ஏ.ஆர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.