அதனால் என்ன? - ஞானக்கூத்தன்

Photo by Codioful (Formerly Gradienta) on Unsplash

 பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதனால் என்ன?- 
ஞானக்கூத்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.