யாரு செஞ்ச பாவம் ? - மகா.தமிழ்ப் பிரபாகரன்

Photo by FLY:D on Unsplash

மௌனத்தையும் குற்றம்!
சாட்டியே பழக்கப்பட்டதடா!
நான் கண்ட!
பந்தம்...!
எமது செவிகேட்கவே!
மட்டம்தட்டுதடா!
சில சொந்தம் !!
இவர்களின்!
கார்த்திகைமாத விரதம் போலே!
மௌனம் காத்தவனை!
தூண்டிவிட்டு என்னதொரு!
வேடிக்கை சல்லாபம்!
அர்ப்பமான இன்பமயம்...!
மௌனமென்மை!
குலைந்தால்!
அர்ப்பமயம் பந்தத்திற்கு!
காதுக்கினிய!
இனிமைகளாகுமா?!
நம்பிய போதெல்லாம்!
ஏமாளி,!
கோமாளியானேன்...!
வெம்பிய நாழிகையாவும்!
தன்னந்தனிமையில்!
கண்ணீரானேன்...!
சிலர் வேசங்களின்!
ஒத்திகை கண்டுக்கழிக்க!
விசமத் தனமாய்!
பெத்தவக்கூட்டுக்குள்ளே நஞ்சை!
கக்கியது சொந்தம்...!
விளைவு ! பெத்தவள்!
ஓலமாய் கடுங்கூறும்!
வார்த்தை வழியே என்!
செவியுணர சொன்னாள்!
நீயெல்லாம் கவித!
எழுதறனு தமிழு!
தமிழுனு தெருத்!
தெருவா சோத்துக்கு!
பிச்சயெடுக்க போற...!
தாயே !!
நீயும் படைப்பவள்!
நானும் படைப்பவன்!
ஈரெய்ந்து மாசம்!
தாமதமாயிற்று!
என்னை படைக்க...!
அம்மா !!
பூலோக பிம்பத்தில்!
நான் ஒளிர!
நீ காரணம்...!
பிரசவ வலியில்!
உமக்கு அனுபவமுண்டு!
கலைஞனின் கைவலி!
உணர்ந்ததுண்டா !!
உன் கருவறையில் ததும்பி!
இருளில் குடியிருந்த!
உன் மகன்!
உணர்கிறேன் !!
படைப்பாளியாய்...!
நானும் முதல்வனாய்!
உன் புதல்வனும்!
மிளிர்வேன்!
தேம்பாதே அம்மா
மகா.தமிழ்ப் பிரபாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.