நான் - கவிவள்ளி

Photo by Enkhjin Ganbaatar on Unsplash

அனைவரும் சுவாசிக்கும்!
காற்றாய் இருப்பேன்.!
மென்மையான தென்றலாய்!
மட்டுமல்ல...!
முகமூடி மனிதர்களின்!
நிஜத்தைக் கண்டால் !
சீறிவரும் !
சூறாவளியுமாய்...!
எப்போதும் புன்னகையே !
சிந்தும் மலராய் இருப்பேன்.!
மனம் மயக்கும் !
மணம் வீசுவதற்கு!
மட்டுமல்ல...!
புறஅழகை மட்டுமே !
விரும்பி வரும் !
வண்டுகளுக்கு!
உயிரோடு விழுங்கும் !
நெப்பந்தஸ் மலராய்...!
அனைவரையும் தாங்கும் !
பூமியாய் இருப்பேன்.!
தன்னைத் தோண்டுபவரை !
தாங்கும் நிலம் போலல்ல...!
ஜாதிமத ஏற்றத்தாழ்வுகள் !
அதிகமாகும் போது !
வெடித்துச் சிதறும் !
பூகம்பமுமாய்...!
மொத்தத்தில் பாரதி கண்ட !
புதுமைப் பெண்ணாய் அல்ல!
பெண் பார்வையில் !
பெண்ணாய்...!
- கவிவள்ளி!
புதுச்சேரி
கவிவள்ளி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.