நெஞ்சமதைத் தழுவும் வரை - கா.ந.கல்யாணசுந்தரம்

Photo by Scott Webb on Unsplash

இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான்.
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று...
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும்...
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்...
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'
கா.ந.கல்யாணசுந்தரம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.