மரம் - ஜெயக்குமார் (ஜே.கே)

Photo by Tengyart on Unsplash

யார்மீது கோபமோ!
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.!
நீண்ட சாலையில்!
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.!
வளர்ந்துவிட்ட!
நகரத்தின் அடையாளமாய்!
நடமாடும் மனித இயந்திரங்கள்!
காங்கிரீட் கட்டிடங்கள்.!
வாகன நெரிசலும், புகையும்...!
வெகுநேரமாக சுற்றுகிறேன்!
எங்கும் தென்படவில்லை!
மரமெனும் மகத்துவம்!
மெதுவாக புரிய ஆரம்பித்தது!
சூரியனின் கோபம்
ஜெயக்குமார் (ஜே.கே)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.