விடுதலையே வேர் - ஜென்சன்

Photo by the blowup on Unsplash

உயிரோடு குளிக்குள்ளே உடலங்கள் உறங்க! !
கல்லறைக் கடிதங்கள் நன்றியுடன் முடிக்க! உண்மைக்கு அங்கே உருவம் இல்லை!!
எம் அழிவு அயல் நாட்டிற்க்கு ஒரு இழிவு! மண்தெறிக்க மழை பொழிப்பினும் வானம் கிழிய இடி இடிப்பினும்! !
புளுதி புலர காற்றடிப்பினும்!... !
உச்சி வெயில் மேல் மண்டையில் வேர்வைகளால்! !
ஏதேனும் எழுதினும்......! !
ஈழத்திற்காய் விழுந்தால் விதை!.. எழுந்தால் மரமென்போம்..! !
யார் யாரோ ஈழத்தின் பெயரை வைத்து அரசியல் நடாத்துகின்ரனர்.. ''உயிரைக்கொடுப்பான் வன்னித்தமிழன் அதற்கு உரத்தைக் கொடுப்பான் உலகத் தமிழன்'' குரல் கொடுக்க சனமுண்டு!! இருந்தும் கை கொடுப்பார் யாருமின்றி எம்மை..!
விருந்துண்ட கைகளைப்போல் !
கழுவிச் சென்ரனர் பலர்?! !
மாவீரர்கள் தாங்களே உயிரின் எழுத்தாகி கல்வெடினுள் பதிந்தார்கள்.., !
துளையிட்ட மூங்கில்களாய் இருந்து மௌனத்தின் சப்தத்தால் கானமாய் இசைந்தார்கள்..!
எவ்வளவு தான் அழிவின் மத்தியில் அழகாய் அலைந்தாலும்.! !
பகை அவன் பதுங்கி வருவான் பகலில் பயந்து!!! !
எம்மவரோ கொஞ்சம் தும்மினால் பதறியடித்தோடுவான் அவன் பன்மை சிதற புலிகளால் முடிந்தது உயிரின் முகம் கலையும் வரை உண்மையாய் களமாடுவது என்வயதிற்கு தகுந்தது அலங்கரித்த தமிழினால் தரை தளைக்க தன்மானத்துடன் போராடுவது.. முட்கம்பிகளோ முன்னே!! காவலரண்களோ பின்னே; பிறப்பும் முன்னே இறப்பும் பின்னே; கவலைகளோ! முன்னே சில கவிதைகளோ பின்னே இருந்தும்! !
ஏன் எம் நாடோடி வாழ்க்கை மட்டும் நடுவில் நிலைக்கின்றது? உண்மையில் நான் தாயகத்தில் இருந்தபோது! !
ஈழத்தின் அருமை புறியேன்! !
பெருமை அறியேன்! ''இது சூழ்நிலை''. நன்மை தனை நான்கு பேருக்கு நன்றி பாராது உழைத்தவன் கடைசி வரலாற்றை சற்று வகுத்து கூறுகின்றேன் சற்று சிந்தியுங்கள்- ((இரும்புத்தொப்பி அணிந்து ஒருவன்,!
சில பல ஆயுதங்கள் ஏந்தி இன்னொருவன்!! !
நட்ட நடு நிசியில் சுதந்திரக்கனவு காணவிடாமல் கதவை தட்டும் ஒரு நல்லவர் கூட்டம்)) !
திறந்து பார்த்தால்!!!...?;;!
என் நிசியின் உறக்கம் கழித்து விழி ஓரம் இமைகள் மெல் திறக்க! !
வீதியோரம் ஏதோ கருகிய வாடை கண்டு கொண்டேன் அதில் எரிவது அவன் இடது கால் தொடடை என்று!! !
ஐயகோ! !
அங்கே பாருங்கள் எம் அழகிய தேசத்தில் அழுகியவாடை! !
உற்று நோக்குங்கள் அவர்களின் சுதந்திர தேசம் சுந்தர வீதியில் எரிகின்றது..! தாயின் உடலம் கிழித்தவனை அண்ணனின் தேகம் புதைத்தவனை! !
மண்ணின் பெருமை வீதிக்கு இழுத்தவனை! உயிரோடு உலவ விடலாமா?? அங்கே பொய்மை உருவமாகிறது உண்மை அருவுருவமாகிறது!! !
கிழக்கிலே பகலவன் படை எடுக்க மேற்க்கிலே அஸ்தமனமாக வடக்கும் தெற்க்கும் என்ன நாதியற்று போனதா?...! ஒரு முறை நான் இலங்கையனை கேட்டேன்! !
ஈழத்தவனை அல்ல இலங்கயனை!! தமிழரின் நிலம் எங்கே என்று! அதற்க்கு அவன் இதோ!! !
என்றான் உச்சி குளிர்ந்தது!.. !
அங்கே பிணங்களின் தடையம் சுடுகாடுதான் விடையம் சரி மாவிர மக்களின் ஆலயம் கேட்டேன்! !
இதற்க்கும் அவன் மூடிய குளிகளை காண்பித்தான் ம்..ம் அந்த மடையன் ஒரு விடையத்தை அறிவில் இருந்து விலக்கி விட்டான் குளிக்குளே விதை மூடி இருப்பினும் அதன் வாழ்விடம் ஏனோ நாளை பகலவன் பார்வையில் தான்
ஜென்சன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.