நீங்காத நினைவுகள் - இதயவன்

Photo by Jr Korpa on Unsplash

முதல் பார்வையில்
என்னை கொள்ளைக் கொண்டது...

காதலை சொல்லும்போது
உன் மௌனத்தில்
என்னை வென்றது...

தொலைப்பேசியில் நான்
ஒன்று கேட்க
நீ தர மறப்பதும்
அதில் நான் உருகுவதும்

சில நேரங்களில்
நீ என்னை வெறுப்பதும்
நான் உன்னை நேசிப்பதும்

நான் உன்னை வெறுப்பதும்
நீ என்னை நேசிப்பதும்
அதில் ஒரு சுகம்
நமக்கு!

நீ என்னைப் பிரியும்போது
நான் உன்னைப் பிரியும்போது
உடல் பிரிந்தாலும்
உயிர் பிரியாமல்
செல்வதும்...

பேசிப் பேசி வார்த்தைகள்
தீர்ந்தாலும் ஆசைகள்
தீராமல் வாழ்வது

இன்னும் சொல்லிக்கொண்டே
போனாலும் சொல்லாமல்
வாழ்வதுதான் "நீங்காத நினைவுகள்"
இதயவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.