மஞ்சு விரட்டு - ஈஸ்வரி

Photo by Jr Korpa on Unsplash

காலையில் எழுந்ததும்
பிள்ளை போல்
என்னை குளிப்பாட்டி
கொம்பு சீவி
நெற்றிக்கு திலகமிட்டு
பொட்டிட்டு பூ வைத்து
பலூன் கட்டி அலங்கரித்தாய்!

இனிப்பான புது பொங்கல்
திகட்டாத செங்கரும்பு
என தடவி தரும் போது
நினைத்து விட்டேன்
என் வளர்ப்பு அன்னை
என்று உன்னை!

ஒரு மணி நேரத்தில்
காட்டி விட்டாய்
வாடி வாசலில்
நீ யார் என்று!

கேட்டேனா! உன்னிடம்
இந்த புது சோறும்
புது பகட்டும்
எப்போதும் போல்
பருத்திக்கொட்டையும்
புண்ணக்கும்
தந்துவிட்டுப் போயேன்!

வயிற்றுக்கு சோறுட்டு
வளமாக வளர்த்து விட்டு
எதற்காக வருடம்
ஒரு முறை உன்
உயிருக்கு நீயே
உலை வைக்கிறாய்
ஈஸ்வரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.