அழகு தின்னிப் பறவை! - எஸ்.நளீம்

Photo by WrongTog on Unsplash

விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்!
இரட்டைப் பறவைகளாய்!
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல!
அதில் மொய்க்கும்!
ஆடு போல அனைத்தையும் மேயும்!
புறாக்கள் போல!
நட்சத்திரங்களைப் பொறுக்கியுண்டு!
நிலா முட்டியில் பாலருந்தித் திரும்பும்!
ஆடுபோல் ஓரிடத்தில் குந்தி ஓய்வாய் இரை மீட்டும்!
மீண்டும் இரவு விளக்கின் மங்கிய இருளில்!
ஒதுங்கிய மாராப்பில் புகுந்து!
கோழியாய்!
எங்கனும் சீச்சிப் பொறுக்கித் தின்று!
களைப்பில் மயங்கி விழும்
எஸ்.நளீம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.