எந்த இரவு எங்களு.. மரணம் ஒரு முறை -

Photo by Tengyart on Unsplash

எந்த இரவு எங்களுக்கென்று விடியும்..மரணம் ஒரு முறை தான்!
!
01.!
எந்த இரவு எங்களுக்கென்று விடியும்!
இறுதிப் போரில்!
சரணடைய வந்தவர்களின் உடலை!
சல்லடையாகத் துளைத்தன!
துப்பாக்கி குண்டுகள்!
தமிழின குடியிருப்புகள் மீது!
போடப்பட்டன!
கொத்துக் குண்டுகள்!
நிராயுதபாணியாக நின்றவர்களுடன்!
சமர் செய்வது வீரமன்று!
பச்சிளம் பாலகனின்!
நெஞ்சை குறிவைத்துப் பாய்ந்த!
தோட்டாக்கள்!
மனதில் துளிக் கூட!
ஈரம் இல்லாதவர்கள்!
இட்ட கட்டளையால்!
உடலைத் துளைத்தவை!
மருண்டு விழிக்கும்!
கண்களைப் பார்த்து!
சிங்கள சிப்பாயின்!
துப்பாக்கி!
அவனது கரங்களிலிருந்து!
நழுவி இருக்காதா!
தான் எடுத்த முடிவு!
சரிதானென்று!
மகாவம்சத்தை கோடிட்டுக்!
காட்டினால்,சிங்களவன்!
மனசாட்சியிடமிருந்து!
தப்ப முடியுமா!
தப்பிக்க நினைக்கும்!
போர்க் குற்றவாளி!
அரியணையை அலங்கரிக்க!
இந்தியா சாமரம் வீசலாமா!
துப்பாக்கி ரவைகள்!
சிறுவனின் உடலை!
சல்லடையாகத் துளைத்ததைக் கண்டு!
உத்தரவிட்டவன்!
பிடரி சிலிர்த்து!
மனித மாமிசத்தை!
ருசிக்க விடலாமா!
காஷ்மீர் விஷயத்தில்!
கர்ஜிக்கும் இந்தியா!
இலங்கை விஷயத்தில்!
மௌனிப்பது ஏன்!
புரட்சி எங்கும்!
வேர்விட்டுவிடக்!
கூடாதென்று மைய அரசு!
கழுகுக் கண்ணால்!
கண்காணிக்கிறது!
பாலச்சந்திரன்!
உடலைப் பார்த்த பிறகும் கூட!
மௌனித்தால்!
நாம் மானுடமா?!
!
02.!
மரணம் ஒரு முறை தான்!
-----------------------------------!
தமிழினமே விழித்துக்கொள்!
உனக்கு கல்லறை செய்கிறவன்!
உனது அருகாமையிலேயே!
இருக்கிறான்!
இன்னொரு கன்னத்தைக் காட்ட!
நாங்கள் இறைமகனின்!
சீடர்கள் அல்ல!
இரக்கத்தை எதிர்பார்க்க!
நீங்கள்!
சிலுவையில் மரித்தவர் அல்ல!
கிழிபட்டத் தோல்!
அனல் காற்றால்!
மேனி எரிகிறது!
கிட்டத்தில் பீரங்கிக் குண்டு!
வெடித்ததால்!
கேட்கும் திறனும் போயிற்று!
மங்கிய கண்பார்வையை!
வைத்துக் கொண்டு!
இருந்தாலென்ன!
இறந்தாலென்ன!
கைதியாக ஆயுள்!
முழுவதும் வாழ்வதைவிட!
மரண வலியை பொறுத்துக் கொண்டு!
இன்றே சாகலாம்!
அவதாரம்!
வனவாசம் இருந்த கதை!
வானரம் தம்!
வாலால் எரியூட்டிய இலங்காபுரி!
மேலும் மேலும்!
மனிதக் குருதியை!
பருகக் கேட்கும்!
எல்லைக் காளி!
கருணையற்ற கடவுள்!
தயை இல்லாத அரசன்!
விலங்கிடப்பட்ட நீதி!
சாட்சியை விலை பேசும் சட்டம்!
புத்தரை முன்நிறுத்தும் முகமூடி!
இறுதியில் மரண வியாபாரிகள்!
சமஉரிமை தருவதாய்!
ஒப்பந்தம் போடுவர்!
சாட்சிக் கூண்டில்!
நிற்கவிடாமல் காப்பாற்றியதற்காக!
இந்தியாவிடம்!
நன்றி விசுவாசம் காட்டுவர்!
ஈழம் பற்றிய!
கோரிக்கைகளை மக்கள்!
மறந்த நேரம் பார்த்து!
மீண்டும் அரியணை ஏறுவர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.