தீட்டு - சூர்யா

Photo by FLY:D on Unsplash

தாழம்பூக்களிலெழுந்தாடும் அழகுஅசைவுகள்!
நாகங்களையும் வசீகரித்துவிடுகின்றன.!
மகரந்தகளில் பாம்புகள் மயங்கும் அகாலத்தில்!
தேன்வண்டுகள் துளிவிஷத்தை அருந்தலாம்.!
கவர்ச்சிகளிலெழும் ரசனைகளுக்கென்று!
அருவருப்பு எல்லைகள் குறிக்கப்படவில்லை இன்னும்.!
வெள்ளைப்பன்றிக்கு மூக்குத்தி அணிதலையும்!
கருவாட்டுக்கூடைக்கு முல்லைச்சரம் புனைதலையும்!
சிந்தை புதுமையென அலங்கரிக்கையில்!
சேற்றில் புரண்டெழும் தலைவீங்கி சர்ப்பங்கள்!
கங்கை பிரவாகிப்பைத் தீட்டு என்றழைக்கக்கூடும்.!
!
- சூர்யா
சூர்யா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.