இரண்டாம் ஜாமத்துக் கதை - சல்மா

Photo by Pramod Tiwari on Unsplash

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய !
இரவுகளில் !
பழகிய நிர்வாணத்திற்கிடையில் !
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய் !
என் அழகின் களங்கமின்மையை !
பெருத்த உடலும் !
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும் !
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச் !
சொல்கிறாய் !
இன்றும் இனியும் !
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும் !
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில் !
புதையுண்டிருக்கும் என் குரல் !
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும் !
உண்மைதான் !
என் உடலைப் போலல்ல !
உன்னுடையது !
பறைசாற்றிக்கொள்வதில் !
வெளிப்படையாக இருப்பதில் !
இதற்கு முன்னும்கூட !
உன் குழந்தைகள் வேறு எங்கோ !
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம் !
உன்னிடம் தடயங்களில்லை என்பதால் !
நீ பெருமை கொள்ளலாம் !
நான் என்ன செய்ய? !
என் நசிவைப் போலத்தான் !
இந்தப் பிரசவக் கோடுகளும் !
எளிதில் செப்பனிட முடிவதில்லை !
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை !
உன்னைக் காட்டிலும் !
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது !
இயற்கை எனக்கு !
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று !
எனது தோல்வியின் முதலாவது நிலை !
முதல் ஜாமத்தைக் காட்டிலும் !
விபரீதமானது !
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம் !
சுவரோவியத்தில் அமைதியாக !
அமர்ந்திருந்த புலி !
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான் !
என் தலைமாட்டிலமர்ந்து !
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது. !
-சல்மா !
நன்றி: !
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத்தொகுப்பு !
காலச்சுவடு பதிப்பகம்
சல்மா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.