நம்பிக்கை துளிர்க்கும் தருவாயில்!
அதன் முனைகளை மழுங்கசெய்கிறது!
உனது வார்த்தைகள்.!
காதுகளை செயலிழக்க செய்து செவிடனாகி!
முயன்று முன்னேறுகிறேன்!
கண்களின் முன் சில செயல்கள் நிகழ்த்தி!
மீண்டும் திசை திருப்ப முனைகிறாய்.!
இப்போது கண்களை கட்டிக்கொண்டு!
கண்ணிருந்தும் பார்வையற்றவனாகிறேன்.!
தொடர்ந்து திசைதிருப்புகிறாய்!
என் கவனத்தை நீ!
தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன் நான்!
தீர்மானமாய் உணர்ந்துகொண்டேன் நான்!
திசைதிருப்புவதில் நீயும்!
இலக்கின் உச்சம் அடைவதில் நானும்!
நம்பிக்கையோடிருப்பதாய்
ச.கோபிநாத், சேலம்