முரண் - ச.இளம்பிறை

Photo by laura adai on Unsplash

நிஜமாயிருக்கிறேன் !
முரணானவள் என !
முகம் சுழிக்கிறார்கள். !
மாக்கோலம் போடுவது !
மருதாணி இடுவது !
பூச்சரம் தொடுப்பது !
கோயிலுக்குப் போவது !
இப்படி எதுவுமே !
என்னிடத்தில் இல்லாததால் !
விடிவேதும் இல்லாது !
வேதனைப்படுகிறேனாம் !
அடங்காப்பிடாரி என !
ஆசைதீரக் கத்தட்டும் !
அதற்குமேல் என்னவுண்டோ !
எல்லாமே சொல்லட்டும். !
நான், !
நிஜமாகத்தானிருப்பேன் !
இவர்கள் !
முரணானவள் என !
முகம் சுழித்தே !
வாழட்டும்...! !
ச.இளம்பிறை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.