கிங்கிரன் கொடுங்கீறு - ஆதவன்

Photo by Jake Hills on Unsplash

வீடிழந்த நிலவிலிருந்து!
தள்ளி நிற்கிறாள்!
கொங்கைக் கிழத்தி.!
முகத்திலே கொற்ற வஞ்சி!
சருமங்கள் ரொம்ப பிஞ்சு!
கானல் கவிதை காணின்!
நாணுவாள்;பேணுவாள்!
மயிர்க் கிளர்ச்சி கொள்வாள்,!
உயிர்த் தளர்ச்சி வரையிலும்.!
மன்மதன் இவன்!
இங்கித மில்லை இவனிடம்!
கொங்கை மாந்தர் காணின்!
தங்காது போகும் சடரூபன்!
சிருங்காரம் மிகுவானன்;!
அகங்காரம் தகுவானன்.!
யாவும் படைத்த கிங்கிரன்;!
தாபத்திலே நிகரில்லா இந்திரன்.!
நாணியவள் மேல் கூசம்!
காணுகின்றான் கூசாது.!
ஏனெனவோ!
எங்கெனவோ!
கேட்காமல் போவாளா அ(ச்)சாது.?!
குறுஞ்சீலை களைப்பான்;!
இருகை வைத்தே!
ஆயிரம் செய்வான்!
நுனி நாக்கில் குழைப்பான்!
இனி தடுக்காது போய்விடின்.!
படுக்காது போன நிலவை!
கொடுங்கீறினான்!
சொல்லிங்கே சேராத செயலும்!
பல்லினால் செய்வான் பலவாறு.!
பருந்திடம் குயில்!!
பாடுவதெவ்வாறு?!
கிளரும் நரம்புகளின்!
உளரும் வார்த்தைகளால்!
விருந்து கொள்வான்!
கூம்புடையாளை.!
இத்துணை ஆனபின்னும்!
வித்தினை சேர்த்தபின்னும்!
சத்தினைக் கெட்டபின்னும்!
சிருங்காரம் அடங்கவில்லை!
ஆகாரம் போதவில்லை.!
எழுந்தான்;!
விழுந்தாள்.!
கேணமும்!
நாணமும்!
மானமும்!
போனது!
உயிரோடு ஓர் கோழி!
உரித் தெடுக்கப்பட்டது!
கிங்கிரன் சிரிக்கிறான்!
இங்கிவள் அழுகிறாள்!
மானம், மானம், மானம்,!
எனச் சொல்லியே!
அடக்கிக் கொண்டாள்!
அழ் மனது வேதனையோடு!
அங்கவன் புறப்பட்டான்!
திங்கத்தான் மீண்டும்!
-- ஆதவன
ஆதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.