அகங்காரக் காரன் இவன்!
அவையடக்கம் நாவடக்கம்!
அறியாத மிருகம் இவன்...!
அன்பின் இலக்கணமாக!
வந்த புத்தர் வழி வந்த!
வம்புக் காரன் இவன்..!
மரியாதை தெரியாத!
மனிதன் இவன்!
பல இன மகத்துவம்!
புரியாத பிக்கு இவன்..!
உலக மக்கள் !
உன்னதமாக!
உணரும் ஒரு!
மகானை எழுந்து!
வரவேற்கவும்!
உற்று நோக்கி !
உரையாடவும்!
வேண்டும் என்பதே!
புரியாத மடையன் இவன்..!
பரம்பரை திமிரும்!
மதப் பிரிவினையும்!
மறைந்தே இருக்குது!
காவி உடைக்குள்ளே..!
கருணை நிறைந்த!
உள்ளம் தேடி வந்து!
இன் முகத்துடன்!
உரையாடுகின்றதே!
கருணையே இல்லாத!
சைத்தான் கடு கடுப்பாக!
அமர்ந்திருக்கின்றதே..!
மூன்று மதமும்!
முக் கடல் போல்!
சங்கமித்த இடத்தில்!
இவன் மட்டும்!
மூதேவி போல்!
திரும்பி இருப்பதும் ஏனோ..!
இன வெறி பிடித்த!
இவனுக்கு இணை அடி!
கொடுக்கத்தேவை !
ஒரு கரம்..!
ஆட்டுக் கூட்டத்தின்!
மத்தியிலே அமர்ந்து!
இருக்கின்றது ஒரு!
குள்ள நரி காட்டுப்!
பன்றியாட்டம்!
கபட எண்ணத்தைப்!
பூட்டி வைத்தபடியே!
இவன் உள்ளத்திலே...!
அடங்கா மாட்டை!
அடித்து அடக்குவது போல்!
சாட்டையோடு வர வேண்டும்!
நெஞ்சை நிமிர்த்தி!
சேவகன் ஒருவன்...!
சேட்டு இல்லா இந்தச்!
சிடுமூஞ்சிக்குசொடுக்கும்!
நொடியில் கொடுக்க!
வேண்டும் பல அடிகள்..!
நீ அடங்கும் காலம் வரும்!
வரும் வேளையிலே!
நடுங்கும் உன் கால்களடா..!
ஏற்ற இறக்கம்!
தெரியாத ஏமாளியே!
போற்றப்பட வேண்டிய!
ஒரு மனிதனை அவமதித்த!
கோமாளியே....!
காலியாகப் போகும்!
நாழிகை எப்போ எப்போ!
என்று நினைத்த படியே!
கலியுகக்கடவுளாய்!
ஆட்சி செய்யடா...!
வெல்லப் போவது!
ஒரு காலம் நல்ல!
உள்ளமடா கள்ளன்!
உன்னை தள்ளப் போகிறது!
கம்பி அறைக்குள்ளேயடா...!

ஆர்.எஸ்.கலா, இலங்கை