விடலைக் குஞ்சுகளா - துரை. மணிகண்டன்

விடலைக் குஞ்சுகளா - Tamil Poem (தமிழ் கவிதை) by துரை. மணிகண்டன்

Photo by Jr Korpa on Unsplash

தொப்புள்கொடியாக நம் உறவு!
யார் கண்பட்டதோ!
இன்று சுனாமியால் சிதருண்ட!
குட்டிகுட்டித் தீவுகளாக!
என்று மீண்டும் இணைவோம்!
பிரிந்துபோன மேகங்கள் ஓன்றாய் கூடுவதுபோன்று!
இறைத்தேடச்சென்ற தாய்ப்பறவையினை!
எதிர்பார்த்திருக்கும் விடலைக் குஞ்சுகளாய்....!
இரத்தம் பேசும்!!
காலையில்!
கோழி கூவி எழுந்ததைவிட!
குண்டுகள் கூவி (வெடித்து)!
எழுட்ந்ததுதான் அதிகம்!
ஏன்? எங்களுக்கு மட்டும் இந்த தண்டனை!
இறைவன் கொடுத்த சாபமா!
எங்களுக்கும் இறைவனுக்கும்!
கணக்கு இன்னும் நிலுவையில் உள்ளதா?!
உலக மக்களே ஒன்று கேளுங்கள்!
இறந்தபின் எங்கள் இரத்தம் பேசும்!
பொய்யல்ல உண்மையே....!
!
-துரை.மணிகண்டன்!
(இலங்கை தமிழரிகளின் உள்ளத்திற்காக எழுதப்பட்டது)
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.