பரம்பொருளே - தோ.அறிவழகன்

பரம்பொருளே - Tamil Poem (தமிழ் கவிதை) by தோ.அறிவழகன்

Photo by Jr Korpa on Unsplash

தூசுகள்
நெஞ்சத்தில்
எந்தப் பொருளாலும்
துடைத்து விட முடியாதபடி

அழுக்குகள்
மனத்தில்
எந்த சொஅப்பாலும்
கழுவி விட முடியாதபடி

காயங்கள் இதயத்தில்
எந்த மருந்தினாலும்
மறைத்து  விட  முடியாதபடி

கோபங்கள்
நினைவெங்கும்
எந்த கங்கையாலும்
கரைத்து விட முடியாதபடி

குரூரங்கள்
உடலெங்கும்
எந்த மனத்தாலும்
மாற்றி விட முடியாதபடி

இவை யாவும்
ஒன்றாக்கி
ஓருயிராய்  உலவ வைத்த
பரம் பொருளே

என்னிடம் இருந்து
அகந்தையை மட்டுமாவது
பறித்துக்கொள்  பரம் பொருளே
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.