பட்டம் ஒன்னும் பெரிசில்ல - தமிழீழநாதன்

பட்டம் ஒன்னும் பெரிசில்ல - Tamil Poem (தமிழ் கவிதை) by தமிழீழநாதன்

Photo by Jr Korpa on Unsplash

அம்மா அப்பா ...

எனக்காக என்னோடு
விடிய விடிய
விழித்திருந்த எங்க ஊரு
தெருவிளக்கு.

மொத்த வெயிலையும்
முழுசாகத் தாங்கிக் கொண்டு
எனக்காக நிழல் கொடுத்த
எங்க ஊரு ஆலமரம்.

கத்திப் படிச்சதால
களைப்பு வந்த நேரத்தில
அழுக்குத் தண்ணி என்றாலும்
அன்போடு கொடுத்த
எங்க ஊரு ஊரணி.

பன்னிரு வருடமாக
பத்திரமா பள்ளி செல்ல
பாதை தந்த குளத்துக்கரை.

மதிய உணவுக்கு
மல்லுகட்டி நின்னு
ஒத்த முட்டைக்காக
ஒருவாரம் காத்துருந்த
எடுத்தாலும் குரையாத
ஆயாவின் ஆப்பைக்கு.

”இத்தனை பிள்ளையில
எவனும் படிக்கவில்லை
எப்பாடு பட்டாவுது
இவன படிக்கவையி”
ஊர்காரங்க சொன்ன
ஒத்த வார்த்தை.

வயிருக்கும் வாயிக்குமே
வாழ்க்கையை தொலைச்சுபுட்டு
வயலும் வரப்புமே
தலையெழுத்து என்றிருக்க
கல்வியின் முதழெழுத்து
கற்றுதந்த
பள்ளிகூட வத்தியார்கள்.

பெளவுர்ணமி இரவு
பகல் சூரியன் எதுவானாலும்
மறுக்காமல் அனுமதிக்கும்
கூரைவீட்டு ஒட்டை.

அடைமழை காலத்துல
அடிக்கிற மழையில
கூரைதண்ணி பட்டு
கிழிந்திட கூடாதென்று
அடிவயிற்றில்
அடைகாத்த
அத்தனை புத்தகத்திற்க்கும்.


வெளையாட்டு
வெளையாட்டு என்று
வெட்டிதனம் செஞ்சாலும்
என்னையும் ஆளாக்கிய
எங்க ஊரு பள்ளிகூடம்.

இத்தனைக்கும் என்னால
செய்ய முடிஞ்சது
இவளவுதான்.

இது ஒன்னும்
பெரிசில்ல
அப்பா உழைப்போட….
அம்மா தியாகத்தோட
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.