நலமுள்ள நட்பு - ராஜி

நலமுள்ள நட்பு - Tamil Poem (தமிழ் கவிதை) by ராஜி

Photo by frame harirak on Unsplash

கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும்,
சோகம் அடக்கினால் சஞ்சலமாக இருக்கும்,
வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும்,
இகுளையாக இருந்தால், அபூர்வமாக தெரியும்,

உன்னுடன் பழகும்முறை எனக்குச் சொல்லுவையோ ?
என்னுடைய எண்ணம் உண்மையாகத் தெரியலையோ ?

தோழமை நேர்மையாக, தயங்காமல் வாழவேண்டும்,
பொழுதெல்லாம் பயமில்லாமல், மலரவேண்டும்,
மனிதருடைய கருத்து மரியாதையாய் சொல்லவேண்டும்,
சிநேகிதருடைய அபிப்பிராயம் கேட்க வேண்டும்,

பலமுள்ள வாழ்வு பரிசாக வருமோ ?
நலமுள்ள நட்பு நமக்குத் தருமோ ?
- ராஜி (நன்றி : திண்ணை)
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.