அந்தக்காலந்தான் வந்திடுமா! - த. எலிசபெத்

அந்தக்காலந்தான் வந்திடுமா! - Tamil Poem (தமிழ் கவிதை) by த. எலிசபெத்

Photo by Jr Korpa on Unsplash

ஒருசுண்டு கஞ்சி காய்ச்சி!
உறவெல்லாம் கூடியிருந்து!
வயிறார உண்டுகளித்த‌!
வசந்த மினி வந்திடுமா...!
அம்மம்மா கதை சொல்ல‌!
அப்பப்பா நடைபழக்க‌!
அத்தைசோறு ஊட்டிவிட்ட‌!
அந்தக்காலந்தான் வந்திடுமா...!
அம்மாகை ஓங்கிவர‌!
அப்பம்மா அதைத்தடுக்க‌!
தேம்பியழும் எந்தனுக்கு -கிடைத்த‌!
தேறுதலினி கூடிடுமா...!
ப‌ள்ளிசென்று வந்தவுடன்!
களைநீக்கும் அப்பம்மா!
துள்ளிவிளையாடிவிட !
சொல்லித்தரும் அம்மப்பா...!
தலைவலி காய்ச்சலுக்கு!
தைலங்க ளேதுமின்றி !
பாட்டிசெய்த‌ வைத்தியத்தில் !
கிடைத்த சுகந்தான் கிட்டிடுமா..!
கூட்டாக கதைபேசி!
குடும்ப பலம் வலுத்திட்ட‌!
கூடிக்களித்த காலமினி!
கோடிகொடுப்பினும் மீண்டிடுமா
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.